தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தெலுங்கு, தமிழ் தாண்டி ஹிந்தியிலும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது விஜய் தேவரகொண்டா உடன் ‛ரணபலி' படத்திலும், ‛மைசா' என்ற படத்தில் முதன்மை வேடத்திலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடிக்கிறார்.
பொதுவாக பிரபலங்கள் பற்றி நிறைய டிரோல்கள் வரும். ஒரு பேட்டியில் இதுதொடர்பான கேள்விக்கு இவர் அளித்த பதிலில் கூறும்போது, ‛‛பொய்யான வதந்தி பரப்புவோருக்கு எதற்காக விளக்கம் அளிக்கணும். அப்படி பதிலளித்தால் அவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். சிலர் பணத்திற்காக இப்படி செய்கின்றனர். இதுபோன்ற முகம் தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறேன்'' என்கிறார்.