Advertisement

சிறப்புச்செய்திகள்

தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் யு-டியூப்பில் வெளியாகிறது | 'ஹபீபி' படம் சாத்தியமாக 20 ஆண்டுகள் ஆனது : மீரா கதிரவன் | பிளாஷ்பேக்: இயக்குனராக போராடிய பஞ்சு அருணாசலம் | பிளாஷ்பேக்: அவ்வையாக நடித்த ஆண் நடிகர் | 'தாய் கிழவி' துவங்கும் முன்பே, அடுத்த படத்திற்கும் இயக்குனரை முடிவு செய்த சிவகார்த்திகேயன் | 'ஜனநாயகன்' வினியோகஸ்தர்களுக்கு 'டாக்சிக்' மூலம் 'டானிக்' தரும் தயாரிப்பாளர் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா 'மெஹந்தி' நிறைவு | நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்திற்கு 'பிளடி ரோமியோ' என டைட்டில் | வாரணாசி : ஜார்ஜியாவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு | ராஜமவுலி, மகேஷ்பாபு சண்டை ; ராம் கோபால் வர்மா பகிர்ந்த வைரல் வீடியோ |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல்

31 ஜன, 2026 - 01:27 IST
எழுத்தின் அளவு:
Jananayagan-issue-Censor-Board-files-caveat-in-Supreme-Court
Advertisement

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன., 9ல் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி, படத்தை தயாரித்த கே.வி.என்., நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, தணிக்கை வாரிய பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கள் அடிப்படையில், யு/ஏ சான்றிதழ் வழங்க ஜன., 9ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தயாரிப்பு நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், மீண்டும் இந்த விவகாரத்தை தனி நீதிபதி அமர்வுக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து ஜனநாயகன் திரைப்பட வெளியீடு கேள்விக்குறியானது. இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதன் காரணமாக, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 'தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பிறகே இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடிய போது, அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்றம், விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமைசொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற ... தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap