தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளது. தனி நீதிபதி முன்பாக வழக்கு மீண்டும் எப்போது விசாரணைக்கு வரும் என காத்திருக்கின்றனர்.
இதனிடையே, ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு விஜய் பேட்டியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் தாமதம் குறித்த கேள்விக்கு விஜய் பதிலளிக்கையில் தன்னுடைய அரசியல் நுழைவு காரணமாக படம் சிக்கலை சந்திப்பதாகவும், தயாரிப்பாளருக்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளாராம். இப்படி ஒன்று நடக்கும் என்று யூகித்து தாம் ஏற்கெனேவ மனரீதியாக தயாராக இருந்ததாகவும் கூறினாராம்.
ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெறும் எண்ணத்தில் உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரம் தனி நீதிபதி முன்பு வழக்கு விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. அதே சமயம், தணிக்கை வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், என்ன நடக்கும் என்பது அடுத்த வாரம் தான் தெரிய வரும்.