‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி. நடிகை வரலட்சுமியின் தாயார். அவர் தற்போது சினிமா நடிகை ஆகியிருக்கிறார். பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சாயாதேவி உயர் போலீஸ் அதிகாரியின் மகள். சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான பிறகு சரத்குமாரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். 'மிஸ் பெங்களூரு' பட்டம் வென்று சமூக ஆர்வலராக பணியாற்றி வரும் சாயாதேவி தற்போது நடிகையாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
நடிகை ஆனது குறித்து சாயாதேவி கூறும்போது : நான் தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை மூலமாக நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறேன். இந்த நிலையில்தான் நெருங்கிய குடும்ப நண்பர் பாலா இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டார். அந்த கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். எனக்கு நடிப்பு புதுசு. என் குடும்பமே நடிப்புத் துறையில் இருந்தாலும், நான் நடிப்பதற்கு தயங்கினேன். மகள் வரலட்சுமி தான் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.