ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி. நடிகை வரலட்சுமியின் தாயார். அவர் தற்போது சினிமா நடிகை ஆகியிருக்கிறார். பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சாயாதேவி உயர் போலீஸ் அதிகாரியின் மகள். சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான பிறகு சரத்குமாரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். 'மிஸ் பெங்களூரு' பட்டம் வென்று சமூக ஆர்வலராக பணியாற்றி வரும் சாயாதேவி தற்போது நடிகையாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
நடிகை ஆனது குறித்து சாயாதேவி கூறும்போது : நான் தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை மூலமாக நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறேன். இந்த நிலையில்தான் நெருங்கிய குடும்ப நண்பர் பாலா இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டார். அந்த கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். எனக்கு நடிப்பு புதுசு. என் குடும்பமே நடிப்புத் துறையில் இருந்தாலும், நான் நடிப்பதற்கு தயங்கினேன். மகள் வரலட்சுமி தான் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.