இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சென்னையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு பொண்ணு சிருகுரி மானசா சவுத்ரி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. முடித்துள்ளார். மானசாவின் கனவு எப்போதும் மாடலிங் மற்றும் நடிப்பை நோக்கியே இருந்தது. மாடலிங் உலகிற்குள் அவர் 16 வயதிலேயே நுழைந்தார். நீச்சல், ஸ்கேட்டிங், துப்பாக்கி சூடு மற்றும் நடனம் எனப் பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். ரவிகாந்த் பெரும்பு இயக்கிய 'பப்பில்கம்' என்று தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது "தமிழ் படத்தில் அறிமுகமாகத்தான் விரும்பினேன் ஆனால் வாய்ப்பு கிடைத்தது தெலுங்கு படத்தில் என்றாலும் இப்போது தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் தமிழ் எனக்கு சரளமாக பேசத் தெரியும். நான் நடிக்கும் படங்களில் நானே தமிழில் டப்பிங் பேசவும் முடிவு செய்து இருக்கிறேன். நான் நடிக்கும் படம் பற்றிய முறையான அறிவிப்புகளை தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடுவார்கள்" என்றார்.