சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

பிரபல முன்னாள் மலையாள நடிகையும் நடிகர் பிஜு மேனனின் மனைவியுமான சம்யுக்தா வர்மா தன் பெயரில் பல போலியான கணக்குகள் உலா வருவதாக ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் சரத்குமார், நெப்போலியன் நடித்த ‛தென்காசி பட்டணம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். மொத்தமே 18 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நடிகர் பிஜு மேனனை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது பேஸ்புக்கில் இவரது பெயரில் ஒன்றரை லட்சம் பேர் பின் தொடரும் விதமாக போலியாக கணக்கு இருக்கிறது. இது மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பல போலியான கணக்குகள் இருக்கின்றன.
ஆனால் தனக்கு இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெற்ற ஒரே ஒரு அதிகாரப்பூர்வமான கணக்கு மட்டுமே இருப்பதாகவும் மற்ற அனைத்துமே போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ரசிகர்கள் யாரும் அதில் பகிரப்படும் தகவல்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி போலி கணக்கை செயல்படுத்தி வருபவர்கள் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.