'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய விமர்சனம், 'பெத்தி' இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

பிரபல முன்னாள் மலையாள நடிகையும் நடிகர் பிஜு மேனனின் மனைவியுமான சம்யுக்தா வர்மா தன் பெயரில் பல போலியான கணக்குகள் உலா வருவதாக ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் சரத்குமார், நெப்போலியன் நடித்த ‛தென்காசி பட்டணம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். மொத்தமே 18 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நடிகர் பிஜு மேனனை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது பேஸ்புக்கில் இவரது பெயரில் ஒன்றரை லட்சம் பேர் பின் தொடரும் விதமாக போலியாக கணக்கு இருக்கிறது. இது மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பல போலியான கணக்குகள் இருக்கின்றன.
ஆனால் தனக்கு இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெற்ற ஒரே ஒரு அதிகாரப்பூர்வமான கணக்கு மட்டுமே இருப்பதாகவும் மற்ற அனைத்துமே போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ரசிகர்கள் யாரும் அதில் பகிரப்படும் தகவல்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி போலி கணக்கை செயல்படுத்தி வருபவர்கள் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.




