சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பிரபல முன்னாள் மலையாள நடிகையும் நடிகர் பிஜு மேனனின் மனைவியுமான சம்யுக்தா வர்மா தன் பெயரில் பல போலியான கணக்குகள் உலா வருவதாக ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் சரத்குமார், நெப்போலியன் நடித்த ‛தென்காசி பட்டணம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். மொத்தமே 18 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நடிகர் பிஜு மேனனை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது பேஸ்புக்கில் இவரது பெயரில் ஒன்றரை லட்சம் பேர் பின் தொடரும் விதமாக போலியாக கணக்கு இருக்கிறது. இது மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பல போலியான கணக்குகள் இருக்கின்றன.
ஆனால் தனக்கு இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெற்ற ஒரே ஒரு அதிகாரப்பூர்வமான கணக்கு மட்டுமே இருப்பதாகவும் மற்ற அனைத்துமே போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ரசிகர்கள் யாரும் அதில் பகிரப்படும் தகவல்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி போலி கணக்கை செயல்படுத்தி வருபவர்கள் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.