லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் |
மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. அதை தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த பின்பு அனைவராலும் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் அந்தப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் தொடர்ந்து மலையாளத்திலும் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் அபர்ணா பாலமுரளி.
அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இனி உத்தரம்'. இந்த படத்தில் நடிகர் ஹரீஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை சுதீஷ் ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் தற்போது டிரைலர் வெளியாகி உள்ளது. முதல் காட்சியிலேயே காட்டுக்குள் இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் அபர்ணா பாலமுரளி, தான் ஒருவரை கொன்று விட்டதாக கூறி போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைக்கிறார்.
டிரைலரில் வெளியான காட்சிகளின்படி அவர் தனது பாய்பிரண்டை கொன்றுவிட்டதாக புரிந்துகொள்ள முடிகிறது. எதற்காக அவர் கொலை செய்தார் என்பதை போலீஸ் அதிகாரியான ஹரீஷ் உத்தமன் விசாரிப்பது போன்றும் அரசியல் அளவில் அபர்ணாவின் இந்த வாக்குமூலம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த டிரைலர் விறுவிறுப்பாக தயாராகி உள்ளது.