பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ள படம் 'பிரீடம்'. 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி உள்ளார். சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளனர். இந்த படத்தின் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் தேர்வானது குறித்து இயக்குனர் சத்யசிவா கூறும்போது
"இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். ஒருவரை நல்லவராகக் காட்ட, சில காட்சிகள் வைக்க வேண்டும். ஆனால் சசிக்குமாரை காட்டினாலே போதும். அதே மாதிரி அப்பாவி, ஏழ்மையானவர் எனும்போது, லிஜோ மோலை காட்டினாலே போதும், தனியாகக் காட்சி வைக்கத் தேவையில்லை.
படத்தின் முதல் ஷெட்யூலில் நாயகி இன்றியே படப்பிடிப்பு நடந்தது, கதைக்கேற்ற நாயகியே தேடிக் கொண்டே இருந்தோம். கடைசியாக லிஜோவை தேர்வு செய்தோம். காரணம் ஜெய்பீமில் அவரது நடிப்பு. அவரை பார்த்த உடனேயே ஒரு அப்பாவி பெண் என்ற நினைப்பு வந்து விடும், அமைதியான அடக்கமான பெண் என்கிற எண்ணம் வந்து விடும் அதற்காகவே அவரை தேர்வு செய்தோம். அவர் மலையாளியாக இருந்தாலும் இலங்கைத் தமிழைக் கற்றுக் கொண்டு பேசியுள்ளார் . லிஜோ வந்த பிறகு இந்தப்படம் வேறு மாதிரியாக இருந்தது" என்றார்.