‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ள படம் 'பிரீடம்'. 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி உள்ளார். சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளனர். இந்த படத்தின் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் தேர்வானது குறித்து இயக்குனர் சத்யசிவா கூறும்போது
"இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். ஒருவரை நல்லவராகக் காட்ட, சில காட்சிகள் வைக்க வேண்டும். ஆனால் சசிக்குமாரை காட்டினாலே போதும். அதே மாதிரி அப்பாவி, ஏழ்மையானவர் எனும்போது, லிஜோ மோலை காட்டினாலே போதும், தனியாகக் காட்சி வைக்கத் தேவையில்லை.
படத்தின் முதல் ஷெட்யூலில் நாயகி இன்றியே படப்பிடிப்பு நடந்தது, கதைக்கேற்ற நாயகியே தேடிக் கொண்டே இருந்தோம். கடைசியாக லிஜோவை தேர்வு செய்தோம். காரணம் ஜெய்பீமில் அவரது நடிப்பு. அவரை பார்த்த உடனேயே ஒரு அப்பாவி பெண் என்ற நினைப்பு வந்து விடும், அமைதியான அடக்கமான பெண் என்கிற எண்ணம் வந்து விடும் அதற்காகவே அவரை தேர்வு செய்தோம். அவர் மலையாளியாக இருந்தாலும் இலங்கைத் தமிழைக் கற்றுக் கொண்டு பேசியுள்ளார் . லிஜோ வந்த பிறகு இந்தப்படம் வேறு மாதிரியாக இருந்தது" என்றார்.