என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவாக அறியப்படும் முகேஷ் கன்னா, இந்தியாவின் விடுதலைக்காக போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமது தேசபக்திப் பாடல் தொகுப்பான 'கிராந்திகரி பஹேலி'யின் இரண்டாவது பாடலான 'பஹேலி கீத் 2' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பாடல் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையையும் அவர்களின் வரலாற்றுப் படைப்புகளையும் ஒரு புதிர் வடிவில் காட்டுகிறது. இந்தப் பாடலில், முகேஷ் கன்னா குழந்தைகளுடன் சேர்ந்து புதிர்களைத் தீர்க்கிறார்.
'பஹேலி கீத் 2' பாடலில் சந்திரசேகர் ஆஜாத், வீர் சாவர்கர், மங்கள்பாண்டே, அஷ்பக் உள்ளா கான் ஆகியோரின் கதைகள் இடம்பெறுகின்றன. இந்த பாடல் தொடரின் முதல் பகுதியில், ஜான்சி ராணி லட்சுமிபாய், சஹீத் ராஜ்குரு, சுக்தேவ், பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ், துர்ரம் கான் உள்ளிட்ட வீரர்களின் வாழ்க்கைச் சுருக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
பாடல் வெளியீட்டு விழாவில் முகேஷ் கன்னா பேசியதாவது: 'ஜெய்ஹிந்த்' இயக்கத்தின் மூலம், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் கோரி வருகிறோம். இந்த பாடலின் மூலம் நமது உண்மையான ஹீரோக்களை, தேசத்திற்காக இள வயதில் தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களை பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த இசை தொடர் மூலம் புரட்சியாளர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து, அவர்களின் பெயர்களை நிலைநாட்டுவோம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இதயங்களில் அவர்களின் பெயர்களைப் பதிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.