பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவாக அறியப்படும் முகேஷ் கன்னா, இந்தியாவின் விடுதலைக்காக போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமது தேசபக்திப் பாடல் தொகுப்பான 'கிராந்திகரி பஹேலி'யின் இரண்டாவது பாடலான 'பஹேலி கீத் 2' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பாடல் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையையும் அவர்களின் வரலாற்றுப் படைப்புகளையும் ஒரு புதிர் வடிவில் காட்டுகிறது. இந்தப் பாடலில், முகேஷ் கன்னா குழந்தைகளுடன் சேர்ந்து புதிர்களைத் தீர்க்கிறார்.
'பஹேலி கீத் 2' பாடலில் சந்திரசேகர் ஆஜாத், வீர் சாவர்கர், மங்கள்பாண்டே, அஷ்பக் உள்ளா கான் ஆகியோரின் கதைகள் இடம்பெறுகின்றன. இந்த பாடல் தொடரின் முதல் பகுதியில், ஜான்சி ராணி லட்சுமிபாய், சஹீத் ராஜ்குரு, சுக்தேவ், பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ், துர்ரம் கான் உள்ளிட்ட வீரர்களின் வாழ்க்கைச் சுருக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
பாடல் வெளியீட்டு விழாவில் முகேஷ் கன்னா பேசியதாவது: 'ஜெய்ஹிந்த்' இயக்கத்தின் மூலம், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் கோரி வருகிறோம். இந்த பாடலின் மூலம் நமது உண்மையான ஹீரோக்களை, தேசத்திற்காக இள வயதில் தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களை பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த இசை தொடர் மூலம் புரட்சியாளர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து, அவர்களின் பெயர்களை நிலைநாட்டுவோம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இதயங்களில் அவர்களின் பெயர்களைப் பதிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.