ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? |

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'திரிஷ்யம், திரிஷ்யம் 2' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியை பெற்றன. அந்த வகையில் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் இதன் இரண்டு பாகங்களும் ரீமேக் செய்யப்பட்டன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் என்பவர் மீது டில்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரின் படி டெல்லியை சேர்ந்த அந்த தொழிலதிபர் 'திரிஷ்யம் 2' படத்தின் சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை தனக்கு தருவதாக கூறி 4.3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அதன்படி செய்யாமல் மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பதக், ''இந்த புகாரின் பேரில் என் மீது விசாரணை நடத்துவது என்பது சமூகத்தில் என் மீது இருக்கும் மரியாதையை குறைக்கும் விதமாக இருக்கும்.. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இப்போது இந்த வழக்கு ஆரம்ப கட்ட விசாரணையில் தான் இருக்கிறது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய தேவையில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கட்டும்'' என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.