கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சத்ய சிவா இயக்கத்தில், சசிகுமார், லிஜோமோள் ஜோஸ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியாக வேண்டிய படம் 'ப்ரீடம்'. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படம் நேற்று வெளியாகவில்லை. நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை. அதனால், இன்றும் படம் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், படத்தை ஒரு வாரத்திற்குத் தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
பைனான்சியரிடமிருந்து தயாரிப்பாளர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து 5 கோடி வரை வந்துவிட்டதாம். அதில் 2 கோடியாவது தாருங்கள் என பைனான்சியர் தரப்பில் கேட்டதாகத் தகவல். அந்தப் பணத்தையும் தயாரிப்பாளரால் நேற்று ஒரே நாளில் புரட்ட முடியாமல் போயிருக்கிறது. இப்படத்தில் நடித்ததற்காக சசிகுமாருக்குக் கூட அட்வான்ஸ் தவிர்த்து பேசிய மீதித் தொகையைத் தரவில்லையாம். இருந்தாலும் பட வெளியீட்டிற்காக அவர் கூட அந்தப் பணத்தைக் கேட்கவில்லை என்கிறார்கள்.
நல்ல படங்களை மட்டுமே எங்களது நிறுவனத்தில் தயாரிப்போம் என்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார் தயாரிப்பாளர். சில மோசமான படங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகும் நிலையில், இப்படி ஒரு எண்ணம் கொண்ட தயாரிப்பாளரின் படம் இப்படி சிக்கலில் மாட்டியுள்ளதே என கோலிவுட்டில் வருத்தப்படுகிறார்கள்.