‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ராஜமவுலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில், பிரபாஸ், ராணா டகுபதி, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2015 ஜூலை 10ம் தேதி வெளிவந்த படம் 'பாகுபலி'. இந்திய சினிமாவை மட்டுமல்ல உலக சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திரைப்படம்.
அப்படம் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று படக்குழுவினர் பலரும் தங்களது நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்கள். இதனிடையே, படக்குழுவினர் நேரில் சந்தித்து ரீ-யூனியன் செய்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டவர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர். தமன்னா, அனுஷ்கா ஆகியோர் வரவில்லை. இப்படி ஒரு ரீயூனியனைப் பார்ப்பதற்கு மகிழ்வாக உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து அக்டோபர் 31ம் தேதி வெளியிட உள்ளார்கள்.