தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சசிகுமார் நடித்துள்ள 'பிரீடம்' என்ற படம் இன்று திரைக்கு வருவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இருந்தபோது அவர் அளித்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அதில், ''மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த 'தளபதி' படத்தில் ஒரு காட்சியில் ரத்தம் கொடுத்துவிட்டு பணம் கொடுக்கும் போது, அவர்கள் நன்றி சொல்வார்கள். அப்போது ரஜினி வெறும் பணம் தானே என்று சொல்லுவார்.
இதுபோன்று பலர் சொல்வதைக்கேட்டு நானும் பணத்தை மதிக்காமல்தான் இருந்தேன். அதனால்தான் கடந்த 40 ஆண்டுகளாக அந்த பணம் என்னை மதிக்காமல் இருந்தது. ஆனால் இப்போது பணத்தை பற்றி புரிந்து கொண்டேன். அதை மதிக்கவும் தெரிந்து கொண்டேன். இப்படி நான் மதிக்கத் தொடங்கிய பிறகுதான் இப்போது பணமும் என்னை மதிக்க தொடங்கி இருக்கிறது'' என்று கூறியுள்ளார் நடிகர் சசிகுமார்.




