ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் இருந்து வந்திருக்கும் காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு ஒரே படத்தில் நடித்து விட்டு மூட்டை கட்டிய காஜல் ஒருவரும் இருந்திருக்கிறார்.
1977ம் ஆண்டு வெளியான'ஹம் கிசிசே கம் நஹீன்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் காஜல் கிரண். இந்த படம் சூப்பர் ஹிட். உடனேயே, காஜல் கிரண் பாலிவுட்டில் ஒரு நிலையான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அதன்பிறகு 13 ஆண்டுகளில் 40 படங்களில் நடித்தார்.
ரிஷி கபூருடன் நடித்த 'ஹம் கிசிசே கம் நஹீன்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் அந்த ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த படமாக மாறியது. இதைத் தொடர்ந்து, காஜல் கிரண் பல படங்களில் முன்னணி வேடத்தில் நடித்தார். அவற்றில் ஜிதேந்திராவின் 'மாங் பரோ சஜனா', மிதுன் சக்ரவர்த்தியின் 'வர்தாத்', 'ஹம் சே பட்கர் கவுன்' மற்றும் 'சபூத்' போன்றவை முக்கியமானவை. ஆனால் ஒரு கட்டத்தில் திடீரென சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார்.
தமிழில் 1985ம் ஆண்டு வெளிவந்த 'பந்தம்' படத்தில் நடித்தார். இதில் அவர் சிவாஜியின் மகளாகவும், ஆனந்த் பாபுவின் காதலியாகவும் நடித்தார். மேலும் இந்த படத்தில் ஷாலினி, நிழல்கள் ரவி, ஜெய்சங்கர், மனோரமா, வினு சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கே.விஜயன் இயக்கி இருந்தார்.
இது 'சக்கரயும்மா ' என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பணக்கார தந்தையின் மகள் ஒரு ஏழை வாலிபனை திருமணம் செய்து கொள்வதும், தந்தை பாசத்தால் துடிப்பதும், பின்னர் குடும்பம் ஒன்று சேர்வது மாதிரியான கதை.