‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
2015ம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வெளியான 'இசை' படத்திற்கு பிறகு நடிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தததால், இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார். ஆனால் சில வருடங்களாக அவரது அடுத்த படத்திற்காக பிரம்மாண்ட கார் ஒன்றை மட்டும் வாங்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
'கில்லர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார் . இதில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இப்படத்தை கோகுலம் மூவிஸ் மற்றும் ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர் .
தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளர் ஆக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். இதன் மூலம் நியூ, கொமரம் புலி, அன்பே ஆருயிரே படங்களுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி நான்காவது முறையாக கில்லர் படத்திற்கு இணைந்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.