பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு சர்வம் தாளமயம் படத்தில் நடித்தார். என்றாலும் சூரரைப் போற்று படம்தான் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தற்போது தீதும் நன்றும் என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி மற்றும் அசோக் செல்வனுடன் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் மலையாளத்தில் கூடுதல் அக்கறை செலுத்த தொடங்கி உள்ளார். அவர் நடித்து முடித்துள்ள ஆடுஜீவிதம் படம் வெளிவர இருக்கிறது. உலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற திங்களாழ்ச்ச நிக்ஷயம் என்ற படத்தை இயக்கிய சென்னா ஹெக்டே இயக்கும் பத்மினி என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக குஞ்சாகோ போபன் நடிக்கிறார். ஸ்ரீராஜ் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார்.