ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் நீயா- நானா பெருவாரியான நேயர்களை கவர்ந்து வருகிறது. சமூக பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள் என எடுத்துக்கொள்ளப்பட்டு, நேயர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் தனது துணைவியாருடன் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 41 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அவர் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கும் வகையில், நேயர் கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்கிறார்களாம். அதை தானும் அமர்ந்து கேட்கும் ரஜினி, இறுதியில் தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த வெற்றி தோல்விகள் குறித்து பதிவு செய்கிறாராம். இதற்கான படப்பிடிப்பு நேற்று சென்னை யில் நடந்தது.