புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் | தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை | பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி | எனக்கான பட வாய்ப்புகள் குறையவில்லை : சோனியா அகர்வால் | நடிகை கனகலதா காலமானார் | மே 10ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது 'ஆர்ஆர்ஆர்' | அதர்வா ஜோடியான நிமிஷா சஜயன் | 'ரசவாதி'யில் சித்த வைத்தியர் கேரக்டரை உருவாக்கியது ஏன்? : சாந்தகுமார் பேட்டி | படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு |
ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்பில் ஒளிபரப்பான தொடர் சண்டக்கோழி. இதில், ராஜா ராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்த ரியா விஸ்வநாத், புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோவாக நடித்த நியாஸ் ஜோடி சேர்ந்தனர். மேலும் வீஜே கதிர், சுப்புலெட்சுமி ரங்கன், கிருபா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் என பெரிய பட்டாளமே இந்த தொடரில் நடித்து வந்தனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்ற இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏனோ போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, டிஆர்பியிலும் தொடர்ந்து சொதப்பி வந்தது. இந்நிலையில் ஒருவருடம் கூட ஆகாத நிலையில் சண்டக்கோழி தொடர் முடிவுக்கு வரவுள்ளது. இதற்கு பதிலாக புதிய தொடருக்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கி விட்டதாக சின்னத்திரை வட்டாரங்களிலிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.