நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்பில் ஒளிபரப்பான தொடர் சண்டக்கோழி. இதில், ராஜா ராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்த ரியா விஸ்வநாத், புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோவாக நடித்த நியாஸ் ஜோடி சேர்ந்தனர். மேலும் வீஜே கதிர், சுப்புலெட்சுமி ரங்கன், கிருபா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் என பெரிய பட்டாளமே இந்த தொடரில் நடித்து வந்தனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்ற இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏனோ போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, டிஆர்பியிலும் தொடர்ந்து சொதப்பி வந்தது. இந்நிலையில் ஒருவருடம் கூட ஆகாத நிலையில் சண்டக்கோழி தொடர் முடிவுக்கு வரவுள்ளது. இதற்கு பதிலாக புதிய தொடருக்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கி விட்டதாக சின்னத்திரை வட்டாரங்களிலிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.