மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! |
ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்பில் ஒளிபரப்பான தொடர் சண்டக்கோழி. இதில், ராஜா ராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்த ரியா விஸ்வநாத், புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோவாக நடித்த நியாஸ் ஜோடி சேர்ந்தனர். மேலும் வீஜே கதிர், சுப்புலெட்சுமி ரங்கன், கிருபா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் என பெரிய பட்டாளமே இந்த தொடரில் நடித்து வந்தனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்ற இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏனோ போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, டிஆர்பியிலும் தொடர்ந்து சொதப்பி வந்தது. இந்நிலையில் ஒருவருடம் கூட ஆகாத நிலையில் சண்டக்கோழி தொடர் முடிவுக்கு வரவுள்ளது. இதற்கு பதிலாக புதிய தொடருக்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கி விட்டதாக சின்னத்திரை வட்டாரங்களிலிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.