நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா |
மலையாள நடிகர் திலீப்பை பொறுத்தவரை பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர். என்றாலும் ஆக்ஷன் படங்களிலும் அதிரடி காட்டக் கூடியவர் தான். அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது திலீப் நடித்து வரும் தங்கமணி திரைப்படம் கிராமத்து பின்னணியில் அதே சமயம் முழுக்க முழுக்க ஆக்ஷனை மையப்படுத்தி உருவாகி வருகிறது.
அதனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைப்பதற்காகவே தமிழில் இருந்து சுப்ரீம் சுந்தர், ஸ்டண்ட் சிவா, மாபியா சசி மற்றும் ராஜசேகர் என நான்கு சண்டை பயிற்சி இயக்குனர்கள் இணைந்துள்ளனர். ரதீஷ் ரகுநந்தன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார் நடிகை பிரணிதா சுபாஷ்.