22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மலையாளத்தில் ஜனப்ரிய நாயகன் என்று அழைக்கப்படும் அளவிற்கு குடும்ப ரசிகர்களை குறிவைத்து தனது படங்களை கொடுத்து வருபவர் நடிகர் திலீப். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் நடித்த படங்கள் எல்லாமே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது அறிமுக இயக்குனர் தனஞ்செய் சங்கர் இயக்கத்தில் பா பா பா என்கிற படத்தில் நடித்து வருகிறார் திலீப்.
மலையாள திரையுலகின் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ஏற்கனவே நடிகர்கள் வினித் சீனிவாசன், அவரது சகோதரர் தியான் சீனிவாசன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோருடன் ரெடின் கிங்ஸ்லி, சாண்டி மாஸ்டர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஆச்சரியமாக இந்த படத்தின் கதையை ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் மற்றும் அவரது காதல் கணவர் பாஹிம் ஷபார் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் தற்போது ஆவேசம் பட இயக்குனர் சித்து மாதவன் டைரக்ஷனில் நடிக்கும் புதிய படத்தை கோகுலம் பிலிம்ஸ் தான் தயாரிக்கிறது என்பதால் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இந்த பா பா பா படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அந்த வகையில் ஏற்கனவே வர்ணபக்கிட்டு, 20-20, கிறிஸ்டியன் பிரதர்ஸ் மற்றும் சைனா டவுன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மோகன்லாலுடன் இணைந்து திலீப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.