தமிழ் ரசிகர்களை நம்பினேன் : 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | 'விஜ்ஜ்ஜஜஜு…….' யார் தெரியுமா ? | மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்? | குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன | இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? |
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை ராணுவம் எடுத்து வருகிறது. அதோடு மத்திய அரசு பாகிஸ்தான் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்குத் தடை விதித்தும் வருகிறது. அதனடிப்படையில் பாகிஸ்தான் சார்ந்த நிகழ்ச்சிகள், வெப்சீரிஸ், பாடல்கள், பேட்டிகள் ஆகியவற்றை தேசிய பாதுகாப்பு கருதி உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாதத்திற்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு சினிமா, டிவி உள்ளிட்ட கலைஞர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பலரும் இது குறித்த தங்களது ஆதரவையும் பாராட்டுக்களையும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள்.
பாகிஸ்தான் சார்ந்த சமூக வலைத்தளங்கள் பலவற்றிற்கும் ஏற்கெனவே இந்தியாவில் தெரியாதவாறு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஓடிடி தளங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு சில செய்தி சேனல்களில் வெளியாகும் போலியான செய்திகளின் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.