'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

கடந்த 2022-ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 என்கிற டைட்டிலுடன் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு துவங்கினார்கள்.
தற்போது கர்நாடகாவில் உள்ள கொல்லூரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த கபில் என்கிற துணை நடிகர் இதில் கலந்துகொண்டு நடித்து வந்தார். தனக்கு காட்சி இல்லாத ஓய்வு நேரத்தில் அருகில் இருந்த கொல்லூர் சவுபர்ணிகா ஆற்றில் குளிப்பதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையும், உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அன்று மாலை அவரது உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது. இவரை தொடர்ந்து தற்காலிகமாக காந்தாரா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன்பும் காந்தாரா படப்பிடிப்பிற்காக ஒரு பேருந்தில் படக்குழுவினர் பயணம் செய்த போது விபத்துக்கு உள்ளான சம்பவமும் நடைபெற்றது. நல்ல வேளையாக அந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




