லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. 70 - 80களின் பின்னணியில் உருவான இந்த படம் காதல், ஆக்ஷன் என இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகி இருந்தது. இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஆவ்னி என்கிற சிறுமி நடித்திருந்தார். அந்த படத்தில் தீ விபத்து சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை படமாக்கும் போது அவருக்கு கைகளிலும் கண் புருவம் மற்றும் தலைமுடி ஆகியவற்றில் சின்ன சின்ன தீக்காயங்கள் ஏற்பட்டன. அதை பார்த்து பதறிப்போன படக்குழுவினர் அவரை சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கும்படி கூறினார்கள். ஆனாலும் அந்த சிறுமி அதை மறுத்துவிட்டு அடுத்தடுத்த காட்சிகளில் தொடர்ந்து துணிச்சலுடன் நடித்துக் கொடுத்தார்.
அதன் பிறகு கேரளாவில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அந்த சிறுமியை மேடைக்கு அழைத்து அவரின் துணிச்சலை நடிகர் சூர்யா பாராட்டி பேசினார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது. இந்த ஆவ்னி வேறு யாருமல்ல, மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நடிகை அஞ்சலி நாயர் என்பவரின் மகள் தான். தற்போது படம் வெளியாகி தனது மகளிண் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்து வரும் நிலையில் சூர்யா இப்படி தன் மகளை பாராட்ட வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார் அஞ்சலி நாயர்.
மேலும் இது பற்றி கூறும்போது, 'அந்த படப்பிடிப்பு சமயத்தில் என் மகள் காயம் பட்டாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து காட்சிகளின் நடித்தார். சினிமாவின் மீது அந்த அளவிற்கு அவர் ஆர்வமாக இருக்கிறார். அது மட்டுமல்ல இப்படி அவருக்கு காயம் ஏற்பட்ட விவரம் தெரிய வந்தவுடன் நடிகர் மம்முட்டி உடனடியாக தொடர்புகொண்டு, குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை கூறி அங்கே சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஆலோசனை அளித்தார். அவருக்கு என்னுடைய நன்றி” என்று கூறியுள்ளார் அஞ்சலி நாயர்.