'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! | மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! |
78வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 13ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் திரையிடத் தகுதியான படங்களை நடுவர் குழு பார்த்து வருகிறது. இதற்காக ஆயிரக் கணக்கான படங்கள் நடுவர்கள் முன் குவிந்துள்ளது. அவற்றில் ஒன்று தமிழ் திரைப்படம் 'மாண்புமிகு பறை'. இந்த படத்தை நடுவர் குழுவினர் பார்த்து பாராட்டி உள்ளனர்.
சியா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் சுபா, சுரேஷ் ராம் தயாரிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் சுகுமார் இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்துள்ளார். படத்தின் நாயகனாக திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ளார். காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, "பறை இசையின் பெருமை சொல்லும் இப்படம் எல்லா இசையும் ஒன்று தான். ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் புகழும் மட்டுமே பறை இசைக்கு கிடைப்பதில்லை, அந்த பறை இசையின் பின்னணியை, வலியை, பெருமையை சொல்லும் படைப்பாக உருவாக்கி உள்ளோம்" என்றார்.