கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

சின்னத்திரை தம்பதிகளான சம்யுக்தா, விஷ்ணுகாந்த் திருமணமாகி சில நாட்களிலேயே பிரிந்துவிட்ட நிலையில், ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சொல்லி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் முதலில் லைவ் வந்த சம்யுக்தா, விஷ்ணுகாந்த் தன் உறவினருக்கு போன் செய்து தன்னை பற்றிய வீடியோ, ஆடியோக்கள் இருப்பதாக கூறி மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். இதனையடுத்து மாலையில் லைவ் வந்த விஷ்ணுகாந்த் 'நான் யாரையும் மிரட்டவில்லை. சம்யுக்தா மற்றும் அவரது குடும்பத்தாரை என் குடும்பத்தாருடன் சந்தித்து பேசி சுமூகமாக முடிவெடுக்கவே அழைத்தேன்' என்று கூறியிருக்கிறார். அதற்கு சாட்சியாக சம்யுக்தாவின் சித்திக்கு போன் பேசிய ரெக்கார்டை லைவ்வில் போட்டு காண்பித்தார். போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விவகாரம் மற்றும் சம்மன் குறித்த சம்யுக்தாவின் குற்றச்சாட்டுக்கும் அந்த வீடியோவில் அவர் விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து இதுநாள் வரை விஷ்ணுகாந்தை கண்மூடித்தனமாக விமர்சித்த பலரும் தற்போது சம்யுக்தா தரப்பிலும் ஏதோ பிரச்னை இருக்கிறது. இருவரும் நேரில் சந்தித்து பேசி விரைவில் தீர்வு காண வேண்டும் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.




