பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரை தம்பதிகளான சம்யுக்தா, விஷ்ணுகாந்த் திருமணமாகி சில நாட்களிலேயே பிரிந்துவிட்ட நிலையில், ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சொல்லி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் முதலில் லைவ் வந்த சம்யுக்தா, விஷ்ணுகாந்த் தன் உறவினருக்கு போன் செய்து தன்னை பற்றிய வீடியோ, ஆடியோக்கள் இருப்பதாக கூறி மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். இதனையடுத்து மாலையில் லைவ் வந்த விஷ்ணுகாந்த் 'நான் யாரையும் மிரட்டவில்லை. சம்யுக்தா மற்றும் அவரது குடும்பத்தாரை என் குடும்பத்தாருடன் சந்தித்து பேசி சுமூகமாக முடிவெடுக்கவே அழைத்தேன்' என்று கூறியிருக்கிறார். அதற்கு சாட்சியாக சம்யுக்தாவின் சித்திக்கு போன் பேசிய ரெக்கார்டை லைவ்வில் போட்டு காண்பித்தார். போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விவகாரம் மற்றும் சம்மன் குறித்த சம்யுக்தாவின் குற்றச்சாட்டுக்கும் அந்த வீடியோவில் அவர் விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து இதுநாள் வரை விஷ்ணுகாந்தை கண்மூடித்தனமாக விமர்சித்த பலரும் தற்போது சம்யுக்தா தரப்பிலும் ஏதோ பிரச்னை இருக்கிறது. இருவரும் நேரில் சந்தித்து பேசி விரைவில் தீர்வு காண வேண்டும் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.