பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

தொலைக்காட்சி வந்த புதிதில் சீரியல்களுக்கு தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது. குடும்ப பாங்கான கதைகள், நகைச்சுவை டிராமாக்கள், பக்தி நாடகங்கள் என தரமான சீரியல்களை எடுத்துக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், இன்று டிஆர்பி வேட்டைக்காக கண்டதையும் கதையாக எடுத்து வருகின்றனர். வேற்று மொழி சேனல்களின் சீரியலை காப்பி பேஸ்ட் செய்து வருவதுடன் அதில் வருவது போலவே க்ளாமர் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளையும் தமிழ் சீரியல் உலகிற்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சீரியலில் முதலிரவு காட்சி, முத்தக்காட்சிகளைஒளிபரப்பியுள்ளனர். இதற்கு பலதரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பெரியவர் முதல் சிறியவர் வரை குடும்பமாக பார்க்கும் ஒரு தொலைக்காட்சி தொடரில் இதையெல்லாம் காட்ட வேண்டுமா? இனி சீரியலுக்கும் சென்சார் தேவையா? என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது.




