இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

மும்பை : மும்பையில் உள்ள பிரபல ஹிந்தி பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீடு மீது, மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தொடர்புடைய 5 பேர் கைதாகி உள்ளனர்.
பிரபல ஹிந்தி சினிமா இயக்குநர் ரோஹித் ஷெட்டி; சிங்கம், கோல்மால் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தை இயக்கினார். மஹாராஷ்டிராவின் மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள இவரது வீட்டின் மீது, நேற்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனர். அப்போது, இயக்குநர் ஷெட்டி வீட்டில் இருந்தாரா என தெரியவில்லை.
எனினும் துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும், அருகே பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதனிடையே இந்த துப்பாக்கி சூட்டிற்கு லாரன்ஸ் பிஷ்னாயி கேங் பொறுப்பேற்றுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆனந்த் மராத்தே, ஆதித்யா கெய்னேஸ்வர் சித்தார்த் தீபக், சாம்ராட் ஷிவ்சரண், ஸ்வப்னில் பந்து ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.