தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை இயக்குவதாக சுந்தர்.சி ஒப்பந்தமாகி சில காரணங்களால் விலகிய நிலையில் அதற்கு முன்னதாகவே ரஜினி படத்தை இயக்குவதாக பேசப்பட்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, எதிர்பாராத விதமாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். குருவி தலையில் பனங்காய் என்பது போல ரஜினி படத்தை இவர் சிறப்பாக செய்து விடுவாரா என்பது ரசிகர்களிடமும் கேள்வியாக இருக்கிறது.
சமீபத்தில் வித் லவ் என்கிற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிபி சக்கரவர்த்தி அங்கு பேசும்போது, “தலைவர் 173 பட அறிவிப்பு வெளியானதற்கு பிறகு நான் கலந்து கொள்ளும் நிகழ்வு இது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு நான் எதிர்பாராத இடத்திலிருந்து எல்லாம் எனக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தேடி வந்தன. வித் லவ் என்கிற இந்த படத்தின் விழாவில் அன்புடன் ரஜினி ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நான் கொடுக்கும் வாக்குறுதி என்னவென்றால், தலைவர் 173 படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து நீங்கள் முழு திருப்தியுடன் வெளியேறுவீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன்.. இது என்னுடைய வாக்குறுதி” என்று அழுத்தமாக கூறினார்.