விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி! | துல்கர் சல்மான் உடன் பிரச்னையா : மனம் திறந்தார் டொவினோ தாமஸ் | உதவி செய்யுங்கள் : துரந்தர் படக்குழுவுக்கு பாகிஸ்தான் மக்கள் கோரிக்கை | 5 மணிநேரம் ரசிகர்களுடன் தொடர்ந்து புகைப்படம் எடுத்த மம்முட்டி | எல்ஐகே படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இதோ | தேர்தல் நேரத்தில் களமிறங்கும் நட்டியின் ‛டிஎன் 2026' படம் | 50 கோடியை கடந்த ‛யூத்' | லீடர் இப்படி இருந்தால் வீடும், நாடும் நன்றாக இருக்கும் : ஐஸ்வர்யா | 2026 சட்டசபை தேர்தல் : களம் இறங்கும் சினிமாகாரர்கள் | தெலுங்கு இயக்குனருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன் |

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை இயக்குவதாக சுந்தர்.சி ஒப்பந்தமாகி சில காரணங்களால் விலகிய நிலையில் அதற்கு முன்னதாகவே ரஜினி படத்தை இயக்குவதாக பேசப்பட்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, எதிர்பாராத விதமாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். குருவி தலையில் பனங்காய் என்பது போல ரஜினி படத்தை இவர் சிறப்பாக செய்து விடுவாரா என்பது ரசிகர்களிடமும் கேள்வியாக இருக்கிறது.
சமீபத்தில் வித் லவ் என்கிற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிபி சக்கரவர்த்தி அங்கு பேசும்போது, “தலைவர் 173 பட அறிவிப்பு வெளியானதற்கு பிறகு நான் கலந்து கொள்ளும் நிகழ்வு இது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு நான் எதிர்பாராத இடத்திலிருந்து எல்லாம் எனக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தேடி வந்தன. வித் லவ் என்கிற இந்த படத்தின் விழாவில் அன்புடன் ரஜினி ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நான் கொடுக்கும் வாக்குறுதி என்னவென்றால், தலைவர் 173 படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து நீங்கள் முழு திருப்தியுடன் வெளியேறுவீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன்.. இது என்னுடைய வாக்குறுதி” என்று அழுத்தமாக கூறினார்.




