எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான சீரியல்களில் ஒன்று 'என்றென்றும் புன்னகை'. இதில், நக்ஷத்திரா ஸ்ரீநிவாஸ், கவிதா, நிதின் ஐயர், விஷ்னுகாந்த் மற்றும் சுஷ்மா நாயர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த சீரியல், ஹீரோ தீபக் குமார் வெளியேறிய பின் சற்று தடுமாற ஆரம்பித்தது. இதனையடுத்து இந்த சீரியலுக்கான ஸ்லாட் இரவிலிருந்து மதியத்திற்கு மாற்றப்பட்டது. இந்த சீரியல் 565 எபிசோடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது நிறைவு பகுதிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் 'என்றென்றும் புன்னகை' தொடரின் கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பாகும் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த வருத்ததில் உள்ளனர்.