தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான சீரியல்களில் ஒன்று 'என்றென்றும் புன்னகை'. இதில், நக்ஷத்திரா ஸ்ரீநிவாஸ், கவிதா, நிதின் ஐயர், விஷ்னுகாந்த் மற்றும் சுஷ்மா நாயர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த சீரியல், ஹீரோ தீபக் குமார் வெளியேறிய பின் சற்று தடுமாற ஆரம்பித்தது. இதனையடுத்து இந்த சீரியலுக்கான ஸ்லாட் இரவிலிருந்து மதியத்திற்கு மாற்றப்பட்டது. இந்த சீரியல் 565 எபிசோடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது நிறைவு பகுதிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் 'என்றென்றும் புன்னகை' தொடரின் கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பாகும் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த வருத்ததில் உள்ளனர்.