உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் குஷ்பு. கடைசியாக லஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் நடித்தார். தற்போது கலர்ஸ் டிவிக்காக 'மீரா: ஒரு புதுக்கவிதை' என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். இதன் கதாசிரியராகவும் பணியாற்றுகிறார்.
இந்த தொடர் வருகிற 28ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த தொடரின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் குஷ்புவுடன் சுரேஷ் சந்திர மேனன், பூஜா லோகேஷ், ஈஸ்வர் ரகுநாதன், அரவிந்த் கதிர், அண்ணபூரணி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஜவஹர் இயக்குகிறார், அவ்னி டெலிமீடியா சார்பில் குஷ்பு தயாரிக்கிறார். குடும்ப வன்முறைகளை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் குடும்ப பெண்ணின் கதை.