கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் குஷ்பு. கடைசியாக லஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் நடித்தார். தற்போது கலர்ஸ் டிவிக்காக 'மீரா: ஒரு புதுக்கவிதை' என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். இதன் கதாசிரியராகவும் பணியாற்றுகிறார்.
இந்த தொடர் வருகிற 28ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த தொடரின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் குஷ்புவுடன் சுரேஷ் சந்திர மேனன், பூஜா லோகேஷ், ஈஸ்வர் ரகுநாதன், அரவிந்த் கதிர், அண்ணபூரணி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஜவஹர் இயக்குகிறார், அவ்னி டெலிமீடியா சார்பில் குஷ்பு தயாரிக்கிறார். குடும்ப வன்முறைகளை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் குடும்ப பெண்ணின் கதை.