'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான விஜே என்றால் அது ஆனந்த கண்ணன் தான். நிகழ்ச்சியை நேர்த்தியாகவும், இளைய தலைமுறைக்கு பிடித்த டிரெண்டிங்கிலும் தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து பல சினிமா நிகழ்வுகள், ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். இதற்கிடையே அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சினிமா வாய்ப்பு ஆனந்த கண்ணனுக்கு தொடர்ந்து சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக இல்லை. அதன்பிறகு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழ் கிராமிய கலைகளை 'ஆனந்த கூத்து' என்ற அமைப்பின் மூலம் கற்றுக் கொடுத்து வந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன், கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது 48-வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது 49 வது பிறந்தநாள் அண்மையில் வந்தது. அன்று அவரது மனைவி ராணி கண்ணன், 'எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' என பதிவிட்டிருந்தார். முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதியும் 24-வது திருமண நாளை 'நீ விட்டு சென்ற காதலுடன் வாழ்கிறேன்' என பதிவிட்டிருந்தார். ராணி கண்ணனின் பதிவை பார்க்கும் ரசிகர்களும், நண்பர்களும் மிகவும் எமோஷனலாகி ஆனந்த கண்ணனை நினைத்து உருகி வருகின்றனர்.