ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான விஜே என்றால் அது ஆனந்த கண்ணன் தான். நிகழ்ச்சியை நேர்த்தியாகவும், இளைய தலைமுறைக்கு பிடித்த டிரெண்டிங்கிலும் தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து பல சினிமா நிகழ்வுகள், ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். இதற்கிடையே அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சினிமா வாய்ப்பு ஆனந்த கண்ணனுக்கு தொடர்ந்து சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக இல்லை. அதன்பிறகு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழ் கிராமிய கலைகளை 'ஆனந்த கூத்து' என்ற அமைப்பின் மூலம் கற்றுக் கொடுத்து வந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன், கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது 48-வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது 49 வது பிறந்தநாள் அண்மையில் வந்தது. அன்று அவரது மனைவி ராணி கண்ணன், 'எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' என பதிவிட்டிருந்தார். முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதியும் 24-வது திருமண நாளை 'நீ விட்டு சென்ற காதலுடன் வாழ்கிறேன்' என பதிவிட்டிருந்தார். ராணி கண்ணனின் பதிவை பார்க்கும் ரசிகர்களும், நண்பர்களும் மிகவும் எமோஷனலாகி ஆனந்த கண்ணனை நினைத்து உருகி வருகின்றனர்.