சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான விஜே என்றால் அது ஆனந்த கண்ணன் தான். நிகழ்ச்சியை நேர்த்தியாகவும், இளைய தலைமுறைக்கு பிடித்த டிரெண்டிங்கிலும் தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து பல சினிமா நிகழ்வுகள், ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். இதற்கிடையே அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சினிமா வாய்ப்பு ஆனந்த கண்ணனுக்கு தொடர்ந்து சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக இல்லை. அதன்பிறகு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழ் கிராமிய கலைகளை 'ஆனந்த கூத்து' என்ற அமைப்பின் மூலம் கற்றுக் கொடுத்து வந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன், கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது 48-வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது 49 வது பிறந்தநாள் அண்மையில் வந்தது. அன்று அவரது மனைவி ராணி கண்ணன், 'எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' என பதிவிட்டிருந்தார். முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதியும் 24-வது திருமண நாளை 'நீ விட்டு சென்ற காதலுடன் வாழ்கிறேன்' என பதிவிட்டிருந்தார். ராணி கண்ணனின் பதிவை பார்க்கும் ரசிகர்களும், நண்பர்களும் மிகவும் எமோஷனலாகி ஆனந்த கண்ணனை நினைத்து உருகி வருகின்றனர்.