Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நடிப்பதால் குழந்தைகளை பழக விடமாட்டார்கள் - நித்யா ரவீந்திரன்!

13 பிப், 2022 - 11:13 IST
எழுத்தின் அளவு:
Nithya-Raveendran-share-about-her-past

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை நித்யா ரவீந்திரன். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் நடித்த காரணத்தால் தனது குழந்தை பருவத்தில் நடந்த சில மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், 'எல்லா குழந்தைகளும் பள்ளி முடிந்து விளையாட செல்வார்கள். நான் நாடகம் நடிக்க சென்று விடுவேன். நான் நடிக்கிறேன் என்ற காரணத்தால் நான் பொய் பேசுவேன் என சொல்லி என்னிடம் வீட்டு குழந்தைகளை பழக விடமாட்டார்கள். ஆனால் குழந்தைகள் எல்லோருக்கும் என்னோட வயது என்பதால் அவர்கள் என்னிடம் உண்மையை போட்டு உடைத்து விடுவார்கள். அந்த காலத்தில் நடிகர், நடிகைகள் பற்றி அவ்வளவு சின்னத்தனமாக புத்தி கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்' என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

நித்யா ரவீந்திரன் மேடை நாடகங்களில் நடித்து அதன் பின் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 45 ஆண்டுகளில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் சிறந்த குணச்சித்திர நடிகையாக அறியப்படுகிறார். மேலும், தமிழ் எஃப் எம் ஒன்றுக்கு இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
அன்பே ஆருயிரே, சில்லுனு ஒரு காதல், வேதாளம் - ஞாயிறு திரைப்படங்கள்அன்பே ஆருயிரே, சில்லுனு ஒரு காதல், ... கோலாகலமாக நடைபெற்ற சுஜா வாசன் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற சுஜா வாசன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

R Hariharan - Hyderabad,இந்தியா
18 பிப், 2022 - 08:53 Report Abuse
R Hariharan இன்றும் நடுகல்லை பற்றி நல்ல அபிப்ராயயம் கிடையாது. மற்ற துறைகளுக்கும் இந்த துறைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இதில் நடிகல்கள் பங்கு மிக அதிகம்.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
15 பிப், 2022 - 16:42 Report Abuse
Sathish நித்யாவின் இளம் வயது திரைப்பட பயணத்தை தெரிந்துகொள்ள அஸ்வரதம் என்கிற மலையாள படத்தில் வரும் துலா வருஷ மேளம் பாடலை பார்க்காதவர்கள் youtube இல் பாருங்கள்.
Rate this:
ponssasi - chennai,இந்தியா
14 பிப், 2022 - 18:08 Report Abuse
ponssasi ஏன் நீங்கள் திரை துறை இல் பெண்களுக்கு ஏற்பட்ட அநீதி எதிர்த்து (பெண்கள் மட்டும்) போராடும்போது அவர்களுக்கு ஆதரவாக ஏன் குரல் கொடுக்கவில்லை? பாடகி சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கலாமே. அம்மணி மகாபாரதத்தில் துச்சாதனன் துகிலுரியும்போது அதை தட்டிக்கேட்க திறனிருந்தும் மவுனமாக இருந்த பீஷ்மார், துரோணர், கர்ணன் என ஏனையோரும் தண்டிக்கப்பட்டனர்.
Rate this:
ponssasi - chennai,இந்தியா
14 பிப், 2022 - 17:34 Report Abuse
ponssasi ஒவ்வொரு துறையிலும் மோசமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், உங்கள் மீது மீடியா வெளிச்சம் அதிகம் படுவதினாலும் உங்களை பற்றிய நெகட்டிவ் செய்திகளை மக்கள் அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதினாலும் உண்மையோ பொய்யோ தெரியாமல் மீடியாக்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர், மேலும் ஆபாசம், வன்முறை, சாதி பிரிவினை, கள்ளக்காதல், மாற்றான் மனைவி மோகம் சமுதாயத்திற்கு எது எது எல்லாம் கூடாதோ அவையெல்லாம் சினிமாவில் வர ஆரம்பித்துவிட்டது. இவையெல்லாம் உங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை வர காரணம். பணத்துக்காகவும், புகழுக்காகவும் திரை துறையினர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டனர்.
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
14 பிப், 2022 - 15:51 Report Abuse
VIDHURAN நடிகைகளை பற்றி யாருக்கும் ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது இல்லைபாரதி ராஜா திரைத்துறையில் புதிதாக நடிகைகளை அறிமுகப்படுத்தியதும், பிறகு படங்கள் வெற்றி பெற்றபோது நடிகைகளை தேர்ந்தெடுத்த முறைகளை பத்திரிகைகள் மூலமாக கூறியபிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறை என்பது ஒரு தொழில் என்றும் அதில் திறமையானவர்கள் என்றாவது ஒருநாள் பிரகாசிக்க முடியும் என்றும் ஒப்புக்கொள்ள ஆரம்பித்தனர். குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின்னர் பெரியவர்களஆகி திரைத்துறையில் தொடர்ந்து நடித்தவர்கள் பாவம் தான். ஆனாலும் அவர்களின் மனஉறுதிக்கு அவர்களை பாராட்டத்தான் வேண்டும் நித்யாவும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in