அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை நித்யா ரவீந்திரன். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் நடித்த காரணத்தால் தனது குழந்தை பருவத்தில் நடந்த சில மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், 'எல்லா குழந்தைகளும் பள்ளி முடிந்து விளையாட செல்வார்கள். நான் நாடகம் நடிக்க சென்று விடுவேன். நான் நடிக்கிறேன் என்ற காரணத்தால் நான் பொய் பேசுவேன் என சொல்லி என்னிடம் வீட்டு குழந்தைகளை பழக விடமாட்டார்கள். ஆனால் குழந்தைகள் எல்லோருக்கும் என்னோட வயது என்பதால் அவர்கள் என்னிடம் உண்மையை போட்டு உடைத்து விடுவார்கள். அந்த காலத்தில் நடிகர், நடிகைகள் பற்றி அவ்வளவு சின்னத்தனமாக புத்தி கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்' என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
நித்யா ரவீந்திரன் மேடை நாடகங்களில் நடித்து அதன் பின் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 45 ஆண்டுகளில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் சிறந்த குணச்சித்திர நடிகையாக அறியப்படுகிறார். மேலும், தமிழ் எஃப் எம் ஒன்றுக்கு இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.