ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தாண்டு இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‛சங்கராந்திகி வஸ்துன்னம்' படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக அவர் நடித்ததோடு 4 குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்தார்.
இப்படம் தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா பேசும்போது, ‛‛குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு பிடிக்கும். அதை பெருமையாக கருதுகிறேன். எனது சினிமா கேரியரில் இளம் வயதில் அதிகளவிலான அம்மா ரோலில் நடித்துள்ளேன். ஒரு நடிகையாக இருப்பவர் எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும். அப்படி நடிப்பதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் 4 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன். அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் எனக்கு 6 குழந்தைகள் இருக்கும் என இயக்குனர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்'' என்றார்.