ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

காக்க முட்டை படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை சில புள்ளிகள் வித்தியாசத்தில் தவறவிட்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்து கனா படத்திற்கு கிடைக்கும் என்றார்கள். அதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் தான் தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. இந்த நிலையில் சென்னையில் நடந்து வந்த 18வது சர்வதேச திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. க.பெ.ரணசிங்கம் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது: உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. க/பெ ரணசிங்கம் படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் என் அன்பான நன்றி. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்கு தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். நல்ல நடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெரு நன்றியும். என்றார்