தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அலை, கேங் லீடர், யாவரும் நலம், மனம், 24 (சூர்யா படம்) போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கி பெயர் பெற்றவர் விக்ரம் குமார். இவரது இயக்கத்தில் கடைசியாக 2022ம் ஆண்டில் 'தேங் யூ' படம் வெளியானது. இந்த படம் தோல்வி அடைந்ததால் அதன்பின் விக்ரம் குமாரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
கடந்த சில மாதங்களாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் நடிகர் நிதினை வைத்து விக்ரம் குமார் படம் இயக்குவதற்காக பேச்சுவார்த்தையில் உள்ளார் என செய்தி வெளியானது, ஆனால் நடக்கவில்லை. இந்நிலையில் நிதினுக்கான கதையை விக்ரம் குமார் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை சந்தித்து கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டாவும் இந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்து கூடுதலாக இந்த படத்தை தயாரிக்க யு.வி கிரியேஷன்ஸ் உடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.