சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை அதே பெயரில் படமாக இயக்கி வருகிறார் மணிரத்னம். சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இது சரித்திர படம் என்பதால் சரித்திரகால ஆடைகளை தேர்வு செய்வதும், தயார் செய்வதும் முக்கியமானதாக இருக்கிறது. இதற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஏக் லக்கானி தலைமையில் சுமார் 20 இளம் ஆடை வடிவமைப்பாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
கொரோனா பிரச்சினைக்கு பிறகு ஐதராபாத் பிலிம்சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து 45 நாட்கள் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்தது. இது இரண்டாவது கட்ட படிப்பிடிப்பு. 3வது கட்ட படப்பிடிப்புகள் ராஜஸ்தானில் நடக்க இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இளம் ஆடை வடிவமைப்பாளர்கள் இயக்குனர் மணிரத்னத்துடக் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
அதனை ஏக் லக்கானி தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு எழுதியிருப்பதாவது: பணியாற்றும் அணிகளில் ஒரு அணி, இதோ பெரிய தலைவர் மணி அவர்களுடனேயே புகைப்படம். இந்த அசுரத்தனமான படப்பிடிப்பை முழு மனதுடன் முடிக்கிறோம். இந்த கொரோனா காலத்தில் இதை முடித்திருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை. இனி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். என்று எழுதியிருக்கிறார்.