சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை அதே பெயரில் படமாக இயக்கி வருகிறார் மணிரத்னம். சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இது சரித்திர படம் என்பதால் சரித்திரகால ஆடைகளை தேர்வு செய்வதும், தயார் செய்வதும் முக்கியமானதாக இருக்கிறது. இதற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஏக் லக்கானி தலைமையில் சுமார் 20 இளம் ஆடை வடிவமைப்பாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
கொரோனா பிரச்சினைக்கு பிறகு ஐதராபாத் பிலிம்சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து 45 நாட்கள் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்தது. இது இரண்டாவது கட்ட படிப்பிடிப்பு. 3வது கட்ட படப்பிடிப்புகள் ராஜஸ்தானில் நடக்க இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இளம் ஆடை வடிவமைப்பாளர்கள் இயக்குனர் மணிரத்னத்துடக் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
அதனை ஏக் லக்கானி தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு எழுதியிருப்பதாவது: பணியாற்றும் அணிகளில் ஒரு அணி, இதோ பெரிய தலைவர் மணி அவர்களுடனேயே புகைப்படம். இந்த அசுரத்தனமான படப்பிடிப்பை முழு மனதுடன் முடிக்கிறோம். இந்த கொரோனா காலத்தில் இதை முடித்திருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை. இனி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். என்று எழுதியிருக்கிறார்.