கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் 13ம் தேதி வெளியானது.
படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களின் வரவேற்புடன் நல்ல வசூலை ஈட்டியது. அப்போது 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. அந்த சிக்கலிலும் அரங்குகள் நிறைந்து வசூலும் குவிந்ததாக தியேட்டர்காரர்கள் தெரிவித்தார்கள்.
இருப்பினும் கடந்த மாதம் 29ம் தேதி படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட்டார்கள். அதில் வெளியான பின் தியேட்டர்களுக்கு அப்படத்தைப் பார்க்க மக்கள் வரமாட்டார்கள் என்றார்கள். ஆனால், அதையும் மீறி கடந்த ஒரு மாத காலமாக தியேட்டர்களுக்கு மக்கள் வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
படம் வெளியாகி 45 நாட்களைக் கடந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் 50வது நாளைத் தொட உள்ளது. நாளை கூட சில தியேட்டர்களில் மாலை காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
ஓடிடி தளத்தில் மட்டும் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கலாம் என்பது தியேட்டர்காரர்களின் எண்ணமாக உள்ளது.