பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பூவரசம் பீ பீ, சில்லுக்கருப்பட்டி படங்கள் மூலம் தரமான இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஹலீதா ஷமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. இது ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவையும், உரசலையும் பேசுகிறது. தந்தையாக சமுத்திரகனியும், மகனாக புதுமுகம் மணி கண்டனும் நடித்துள்ளனர்.
இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக இருந்தது. தியேட்டரில் வெளியான இரண்டாவது வாரம் ஓடிடி தளத்திலும் வெளியாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்து விட்டனர்.
ஒரு மாதத்திற்கு பின்பே ஓடிடியில் வெளியிடுவோம் என்று உத்தரவாக கடிதம் கொடுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கூறினார்கள். இதனை மறுத்த தயாரிப்பாளர்களான புஷ்கர், காயத்ரி ஆகியோர் படத்தை விஜய் டி.வியில் வெளியிடப்போவதாக அதிரடியாக அறிவித்தனர்.
அதன்படி நாளை (28ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.