ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பூவரசம் பீ பீ, சில்லுக்கருப்பட்டி படங்கள் மூலம் தரமான இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஹலீதா ஷமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. இது ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவையும், உரசலையும் பேசுகிறது. தந்தையாக சமுத்திரகனியும், மகனாக புதுமுகம் மணி கண்டனும் நடித்துள்ளனர்.
இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக இருந்தது. தியேட்டரில் வெளியான இரண்டாவது வாரம் ஓடிடி தளத்திலும் வெளியாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்து விட்டனர்.
ஒரு மாதத்திற்கு பின்பே ஓடிடியில் வெளியிடுவோம் என்று உத்தரவாக கடிதம் கொடுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கூறினார்கள். இதனை மறுத்த தயாரிப்பாளர்களான புஷ்கர், காயத்ரி ஆகியோர் படத்தை விஜய் டி.வியில் வெளியிடப்போவதாக அதிரடியாக அறிவித்தனர்.
அதன்படி நாளை (28ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.