'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் |

சென்னையில் 'இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025' நேற்று தொடங்கியது. ஆசியான் 2025ன் மலேசிய தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய சுற்றுலா துறை, தென்னிந்தியாவில் உள்ள ஆசியான் நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்துகிறது.
மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவை தஜிகிஸ்தான், பெலாரஸ் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கான முன்னாள் இந்தியத் தூதர் பி.ஆர். முத்துக்குமார் தொடங்கி வைத்தார். திரைப்பட இயக்குநர் பி.வாசு, வெளியுறவு அமைச்சகத்தின் கிளைச் செயலகத் தலைவர் திரு. எஸ். விஜயகுமார் , இந்திய சுற்றுலா அமைச்சக பிராந்திய இயக்குநர் வெங்கடேசன் தத்தாரேயன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் எட்கர் பாங், சென்னையில் உள்ள தாய்லாந்து துணைத் தூதர் ரச்சா அரிபார்க், மியான்மர் கௌரவ தூதர் ஜே. ரங்கநாதன், திரைப்படத் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவின் சார்பில் பொன்னியின் செல்வன், 12த் பெயில் படங்கள் திரையிடப்படுகிறது.




