மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
மலையாள நடிகையான சுவாசிகா தமிழில் ‛வைகை, கோரிப்பாளையம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 15 ஆண்டுகளாக அவர் நடித்து வந்தாலும் கடந்தாண்டு வெளிவந்த ‛லப்பர் பந்து' படம் மூலம் தான் அதிகம் பிரபலமானார். இந்த படத்திற்கு பின் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் மாமன், ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்யா 45, விஜய் ஆண்டனியின் படம் என சில படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சுவாசிகா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "சூர்யா 45வது படத்தில் ரொம்ப வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, என்னிடம் 'இதுற்கு முன் நீங்கள் நடித்த எந்தவொரு கதாபாத்திரம் மாதிரியும் இதில் இருக்காது என்று கூறி தான் இந்த வாய்ப்பை தந்தார். மேலும் எனது தோழில் ஒருவர் ஹிந்தியில் ஷாருக்கான் 'லப்பர் பந்து' படத்தை பார்த்த பிறகு, 'அந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன் என்று கூறினால், என்னுடைய மனைவி கேரக்டரில் அதே பொண்ணு தான் நடிக்கணும்னு சொல்வாரு என சொன்னார். அவர் சொன்னது போல ஷாரூக்கான் அந்த படத்தை பார்ப்பார், கூப்பிடுவார் என நம்புகிறேன், பார்ப்போம்" என நெகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார்.