நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மலையாள நடிகையான சுவாசிகா தமிழில் ‛வைகை, கோரிப்பாளையம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 15 ஆண்டுகளாக அவர் நடித்து வந்தாலும் கடந்தாண்டு வெளிவந்த ‛லப்பர் பந்து' படம் மூலம் தான் அதிகம் பிரபலமானார். இந்த படத்திற்கு பின் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் மாமன், ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்யா 45, விஜய் ஆண்டனியின் படம் என சில படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சுவாசிகா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "சூர்யா 45வது படத்தில் ரொம்ப வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, என்னிடம் 'இதுற்கு முன் நீங்கள் நடித்த எந்தவொரு கதாபாத்திரம் மாதிரியும் இதில் இருக்காது என்று கூறி தான் இந்த வாய்ப்பை தந்தார். மேலும் எனது தோழில் ஒருவர் ஹிந்தியில் ஷாருக்கான் 'லப்பர் பந்து' படத்தை பார்த்த பிறகு, 'அந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன் என்று கூறினால், என்னுடைய மனைவி கேரக்டரில் அதே பொண்ணு தான் நடிக்கணும்னு சொல்வாரு என சொன்னார். அவர் சொன்னது போல ஷாரூக்கான் அந்த படத்தை பார்ப்பார், கூப்பிடுவார் என நம்புகிறேன், பார்ப்போம்" என நெகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார்.