தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

2009ல் வெளியான ‛வைகை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை சுவாசிகா. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் கடந்தாண்டு வெளியான ‛லப்பர் பந்து' அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து மாமன், ரெட்ரோ போன்ற படங்களில் நடித்தார். தற்போது கருப்பு படத்தில் நடித்துள்ளார். சினிமா படங்கள், வெப்சீரிஸ் இரண்டிலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கிறார்.
சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு தொடர்பாக இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது ‛‛15 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். நான் அதுபோன்று எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. இந்த பிரச்னை சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நடக்கிறது. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும். பெண்கள் வாழ்வில் முன்னேற தைரியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் வளைந்து செல்லக்கூடாது. ஒருவராக தவறாக நடக்க முயன்றால் அவர்களை எதிர்கொள்ளவும், சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்க கூடாது'' என்றார்.




