நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி 10 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை பிரபல மலையாள நடிகை மினு முனீர் சென்னை அழைத்து வந்துள்ளார். அங்கு சிறுமியிடம் 4 பேர் அத்துமீறியதாக சொல்லப்படுகிறது.
இதில், பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் கேரளாவில் இருந்த நடிகை மினு முனீரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். திருமங்கலம் போலீசார், சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் மீது மினு முனீர் பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.