ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு |

தமிழில் ஓகே கண்மணி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மெண்டல் மனதில் என்ற பாடலை பாடி பிரபலமானவர் பாடகி ஜொனிடா. அதன்பிறகு அனிருத் இசையில் செல்லம்மா மற்றும் அரபிக் குத்து பாடல்களை பாடி மேலும் பிரபலமானார். உலக அளவில் பல இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பாடகி ஜொனிடா கூறுகையில், இன்ஸ்டாகிராமில் அதிக பாலியல் சீண்டல் நடக்கிறது. ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டதோடு, அதன் பின்னணியில் எனது புகைப்படத்தையும் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்ந்து வந்தபோதும் யார் மீதும் நான் இதுவரை வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை. அது போன்ற நபர்களை உடனடியாக பிளாக் செய்து விடுகிறேன். இதுபோன்று சோசியல் மீடியாவில் நான் பல பாலியல் தொல்லைகளை சந்தித்து இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் ஜொனிடா.