கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛96'. இந்த படத்திற்கு பின் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்' படத்தை இயக்கினார். இந்த படமும் வரவேற்பை பெற்றது. பிரேம் குமார் அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதில் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் இதனை பிரேம் குமார் மறுத்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட பதிவில், "96 இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் கண்டிப்பாக முதல் பாகம் குழுவை வைத்து தான் உருவாக்குவேன். அதேசமயத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் வேறு ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்தினேன். அது 96 இரண்டாம் பாகம் இல்லை" என பதிவிட்டுள்ளார்.