நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛96'. இந்த படத்திற்கு பின் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்' படத்தை இயக்கினார். இந்த படமும் வரவேற்பை பெற்றது. பிரேம் குமார் அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதில் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் இதனை பிரேம் குமார் மறுத்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட பதிவில், "96 இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் கண்டிப்பாக முதல் பாகம் குழுவை வைத்து தான் உருவாக்குவேன். அதேசமயத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் வேறு ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்தினேன். அது 96 இரண்டாம் பாகம் இல்லை" என பதிவிட்டுள்ளார்.