ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய படம் டிமான்டி காலனி. இந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கினார் அஜய் ஞானமுத்து. பின்னர் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 80 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார் அஜய் ஞானமுத்து. முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த அருள் நிதியே இந்த படத்திலும் நடிக்கிறார். நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.




