பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சிவகுமார், சத்யராஜ், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பல நடிகர் நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கொரோனா தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நாம் சின்ன சின்ன வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். தேவையில்லாமல் வெளியில் செல்லாதீர்கள். அப்படியே அவசியத்துக்காக சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்லுங்கள். அதிலும் டபுள் மாஸ்க் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். நம் முடைய தமிழ்நாடு அரசாங்கம் சொல்லும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்.
நான் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட் டுக்கொண்டேன். நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள். இதனை செய்து நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். கொரோனாவை வெல்வோம். கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.