பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சிவகுமார், சத்யராஜ், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பல நடிகர் நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கொரோனா தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நாம் சின்ன சின்ன வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். தேவையில்லாமல் வெளியில் செல்லாதீர்கள். அப்படியே அவசியத்துக்காக சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்லுங்கள். அதிலும் டபுள் மாஸ்க் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். நம் முடைய தமிழ்நாடு அரசாங்கம் சொல்லும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்.
நான் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட் டுக்கொண்டேன். நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள். இதனை செய்து நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். கொரோனாவை வெல்வோம். கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.