'ஆர்யன்' படத்தில் அமீர்கான் நடிக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் சொன்ன புது தகவல் | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'முத்து, குருதிப்புனல்' | தீபிகா படுகோனே கூட 'டான்ஸ்' ஆடவும் ரெடி: சரத்குமார் | இந்த வாரம்... ரிலீஸ் இல்லாத வாரம் ? | ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான நேனு லோக்கல் படத்தை தொடர்ந்து மீண்டும் நானி, கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் தசரா. இந்த படம் வரும் மார்ச் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகவும் திருப்தி அளித்ததாக கருதிய கீர்த்தி சுரேஷ் படக்குழுவினர் 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க காசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கீர்த்தி சுரேஷின் இந்த செயலே இந்த படத்தை பற்றி இன்னும் அதிக அளவில் பேச வைத்துவிட்டது. இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகுபலி புகழ் நடிகர் ராணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் பாட்டில் சேலஞ்ச் ஒன்றை வைத்தார். அதன்படி சிறிய கூல்ட்ரிங்ஸ் பாட்டில் ஒன்றை வாயில் கவ்வியபடி கைகளில் பிடிக்காமலேயே அதில் உள்ள குளிர்பானம் முழுவதையும் குடிக்க வேண்டும் என்பதுதான் இந்த சேலஞ்ச். இதை நானி, ராணா இருவரும் அசால்ட்டாக நிறைவேற்றி விட, அவர்களை தொடர்ந்து தன் பங்கிற்கு தானும் ஒரு பாட்டிலை எடுத்து இந்த சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்தார் கீர்த்தி சுரேஷ். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.