மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான நேனு லோக்கல் படத்தை தொடர்ந்து மீண்டும் நானி, கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் தசரா. இந்த படம் வரும் மார்ச் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகவும் திருப்தி அளித்ததாக கருதிய கீர்த்தி சுரேஷ் படக்குழுவினர் 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க காசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கீர்த்தி சுரேஷின் இந்த செயலே இந்த படத்தை பற்றி இன்னும் அதிக அளவில் பேச வைத்துவிட்டது. இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகுபலி புகழ் நடிகர் ராணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் பாட்டில் சேலஞ்ச் ஒன்றை வைத்தார். அதன்படி சிறிய கூல்ட்ரிங்ஸ் பாட்டில் ஒன்றை வாயில் கவ்வியபடி கைகளில் பிடிக்காமலேயே அதில் உள்ள குளிர்பானம் முழுவதையும் குடிக்க வேண்டும் என்பதுதான் இந்த சேலஞ்ச். இதை நானி, ராணா இருவரும் அசால்ட்டாக நிறைவேற்றி விட, அவர்களை தொடர்ந்து தன் பங்கிற்கு தானும் ஒரு பாட்டிலை எடுத்து இந்த சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்தார் கீர்த்தி சுரேஷ். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.