மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் மாமன்னன். இந்த படத்தின் இசை விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இந்த மேடையில் பேசிய அனைவரும் கீர்த்தி சுரேஷின் அழகை பாராட்டினார்கள். ஆனால் அழகு என்பது கொஞ்சம் மேக்கப் போட்டுக் கொண்டால் வந்துவிடும். அழகும் அறிவும் சேர்ந்து இருக்க வேண்டும் அதுதான் பேரழகு. அது கீர்த்தி சுரேஷுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் படங்களை பார்க்கும் போது அவருக்கு அழகும் அறிவும் இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது என்றார்.