சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

விக்ரம் நடிப்பில் தற்போது தங்கலான் படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமன்னன் பட விழாவில் பேசிய ரஞ்சித், ‛‛பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள இந்த படம் அவருக்கு ஒரு மைல் கல் படமாக இருக்கும். இப்படத்திலும் அவர் ஒரு அரசியல் பேசி இருக்கிறார். விக்ரம் தற்போது பூரண நலமடைந்து விட்டார். அதனால் தங்கலான் படப்பிடிப்பு வருகிற 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப் போகிறது. இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது. அடுத்து சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறேன். அந்த படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது என்றார்.