விவாகரத்து கோரி ஜிவி பிரகாஷ், சைந்தவி மனு தாக்கல் | சலார் சிறுவனை எம்புரானில் நடிக்க வைத்தது ஏன் ? பிரித்விராஜ் ருசிகர தகவல் | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ; வழக்கு விசாரணையை முடித்த சிபிஐ | ராபின் ஹுட் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் | ராஷ்மிகா மகளுடனும் ஜோடியாக நடிப்பேன் : சல்மான்கான் | எதுக்கு கடைசி நேர டென்ஷன் ? பிரித்விராஜ் நெத்தியடி கேள்வி | மலையாளப் படத்திற்கு முக்கியத்துவம் தரும் ரெட் ஜெயண்ட்? | பிரியதர்ஷினின் 100வது படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால் | கும்பகோணம் கோவில்களில் சோபிதா துலிபலா சாமி தரிசனம் | மூக்குத்தி அம்மன் 2 : நயன்தாரா, சுந்தர் சி மோதல், நின்ற படப்பிடிப்பு |
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா எனும் தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பரசுராம் இயக்கி உள்ளார் . வருகின்ற மே 12ந்தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகளில் ஒரு பாடல் காட்சி ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, மகேஷ் பாபுவின் முகத்தில் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டாராம் .
இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, 'நடிக்கும்போது தெரியாமல் மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்து விட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார். 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதனை அவர் லேசான விசயங்களில் ஒன்றாக எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.